Author: Muranpaadu desk

  •  ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

     ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

    தமிழ் நாட்டில் ஒரு விசித்திரமான வழக்கம் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகளுக்கு இங்கே கொடுக்கப்படும் விளக்கம் படுபயங்கர அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவிருக்கும்.  பீகாரில் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பிஜேபியை தோற்கடித்தால் அது ஆர் எஸ் எஸ் சதி.  எப்படியென்றால் பிராசந்த் கிஷோர் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள் கட்சியையும் சேர்த்தே தோற்கடித்து உள்ளார். பிரசாந்த் கிஷோர் ஒரு பார்ப்பனர்.  பிஜேபி மக்கள் ஆதரவை இழந்ததால் லல்லு கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதை உடைக்க இன்னொரு…

  • பிம்ப அரசியலின் பின்னால் எதேச்சதிகாரம்: தவெக-வின் அடக்குமுறையும் இடதுசாரிகளுக்குக் காத்திருக்கும் ஆபத்தும்!

    தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, தனது முதலாளித்துவ-பாசிச முகத்தையும், சட்டம் ஒழுங்கைத் தன் விருப்பம்போல் கையாளும் அதிகாரப் போக்கையும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விதம், வெறும் அரசியல் பழிவாங்கல் மட்டுமல்ல; அது அரசுக் கட்டமைப்பையும் காவல் துறையையும் பயன்படுத்தி எதிர்கால எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்காக நடத்தப்பட்ட ஒரு ‘அதிகாரப் பயிற்சி’ (Power Exercise) ஆகும். வரவிருக்கும் காலத்தில் ஒரு வலுவான இடதுசாரி முன்னணி அமையவுள்ள சூழலில்,…